Breaking News

FACT CHECK: உத்திரபிரதேசத்தில் தலித் பெண் கிணற்றில் தண்ணீர் எடுத்ததற்க்காக தாக்கப்பட்ட வீடியோ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  உபியில் கிணற்றில் தண்ணீர் எடுத்ததற்காக தலித் இளம் பெண் இப்படி அடித்து மானபங்கம் செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாவிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

அந்த சம்பவம் உத்திர பிரதேசத்தில் நடக்கவில்லை மாறாக அந்த சம்பவம் குஜராத்தில் உள்ள  சோட்டா உதேப்பூர் பகுதியில் கடந்த 27.05.2020 ல் நடந்துள்ளது

மேலும் அந்த சம்பவம் கிணற்றில் நீர் எடுத்ததற்க்காக நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை காதல் சம்மந்தமாக நடந்தது

அந்த அடி வாங்கும் பெண்ணின் வயது 16 ஆகும்  அவர் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு மத்தியப் பிரதேசத்திற்கு ஒரு இளைஞனுடன் சென்றுள்ளனர். 

அந்த பெண்னை தாக்கியவர்கள் அப்பெண்ணின் குடும்பத்தினர்தான்

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஆனால் சிலர் அந்த சம்பவம் தலித் பெண் கிணற்றில் தண்ணீர் எடுத்ததற்க்காக  நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback