ரயில் டிக்கெட்கள் ரத்து.. நாளை முதல் முன்பதிவு மையங்களிலே பணத்தை பெற்று கொள்ளலாம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் கொரானா ஊரடங்கால் ஜூன் 30 வரை ரத்தான ரயில் டிக்கெட்களுக்கான பணத்தை திரும்பப்பெற நீங்கள் முன்பதிவு செய்த மையங்களிலே நாளை முதல் 05.06.2020 உங்கள் பணத்தை நீங்கள் பெற்று கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
உங்கள் ரயில் டிக்கட்டுக்கான பணத்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
மேலும் சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, மைலாப்பூர், மாம்பலம், செயின்ட் தாமஸ் மவுண்ட், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, வாலாஜாபாத் சாலை, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட முன்பதிவு மையங்கள் நாளை திறக்கப்படுகிறது.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு