Breaking News

FACT CHECK: குஜராத் அஹமதாபாத்தில் நடந்த போராட்டமா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  குஜராத் மாநிலம் தலைநகர் அஹமதாபாதில் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்.. இரண்டு மாதமாக அடைப்பட்டு கிடைக்கிறோம் உண்ண உணவு கொடுங்கள் அல்லது எங்களை சுட்டு தள்ளுங்கள் என மக்கள் கோரிக்கை !! அடக்க முடியாமல் திணறி வீதியில் விழி பிதுங்கி நிற்கும் போலீஸ், கண்டும் காணாத அரசியல் கட்சிகளும் அரசியல் வாதிகளும்.. என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


அந்த சம்பவம் பலரும் குஜராத்தில் நடந்தது என ஷேர் செய்கின்றார்கள் ஆனால் அந்த சம்பவம் தெலுங்கானா ஹைதராபாத்தில் கடந்த 03.05.2020 அன்று நடந்தது 


ஹைதராபாத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு காரணமாக எங்களுக்கு வருமானம் இல்லை, சாப்பிட உணவு இல்லை என்று கூறி அங்கு திடீர் போரட்டத்தில் குதித்துள்ளார்கள்

உடனடியாக அவர்கலிடம் பேச்சு வார்த்தை நடத்தி 20 கிலோ அரிசியும் 500 ரூபாய் பணம் கொடுக்க முதல்வர் சந்திர சேகர் உத்தவிட்டார் . மேலும் அவர்கள் சொந்த மாநில திருமப இ பாஸ் விண்ணப்பிக்கவும் கூறினார்

ஆனால் சிலர் அந்த சம்பவம் குஜராத்தில் நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.


அட்மின் மீடியாவின் ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback