இ பாஸ் பற்றிய சந்தேகங்களுக்கு : கிளிக் செய்யுங்க தெளிவு பெற்றுகொள்ளுங்கள்
இன்று 31.05.2020 ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு ஊரடங்கை சில தளர்வுகளுடன் ஜூன் 30ஆம் தேதி வரை நீடித்துள்ளது.மேலும் அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் 8 மண்டலங்களாக பிரித்துள்ளார்கள்
பிரிக்கபட்டுள்ள 8 மாவட்டங்கள்
மண்டலம் 1
கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்.
மண்டலம் 2
தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி.
மண்டலம் 3
விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி.
மண்டலம் 4
நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை.
மண்டலம் 5
திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்.
மண்டலம் 6
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி.
மண்டலம் 7
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு.
மண்டலம் 8
சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதி.
உதாரணமாக: கோவை,திருப்பூர்,ஈரோடு, நீலகிரி, சேலம் மற்றும் நாமக்கல் இவை அனைத்தும் சேர்ந்தது ஒரு மண்டலம். 1வது மண்டலம் இந்த மண்டலத்திற்குள் சென்று வர E-Pass தேவையில்லை.
மேலும் நீங்கள் 1 வது மண்டலத்தில் இருந்து 2 வது மண்டலம் அல்லது வேறு ஏதேனும் மண்டலம் செல்ல கட்டாயம் இ பாஸ் வாங்க வேண்டும்.
மேலும் நீங்கள் வெளி மாநிலங்கள் செல்ல கட்டாயம் E-Pass வேண்டும்
நீங்கள் எந்த மண்டலத்தில் இருக்கின்றீர்களோ அந்த மண்டலங்களுக்குள் தான் பயணிக்க முடியும்.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி