Breaking News

நோன்பு கஞ்சிக்கு பதிலாக நோன்பாளிகளின் வீடுகளில் அரிசி வழங்கப்படும்: தலைமை செயலாளர்

அட்மின் மீடியா
0
ரமலான் நோன்பு குறித்து இஸ்லாமிய மத தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார் 



கொரானா பரவலை தடுக்க ஊரடங்கு உள்ள நிலையில் ரமலான் நோன்பு குறித்து இஸ்லாமிய அமைப்பினருடன் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்

அதில் ஊரடங்கு உள்ளதால் பள்ளிவாசலில் வைத்து நோன்பு கஞ்சி காய்ச்சி வழங்குவது மிகுந்த சிரமம் உள்ளது

எனவே ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசியை நோன்பாளிகளின் வீடுகளில் மசூதி நிர்வாகிகள் வழங்குவர் என தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.



அரசு அளிக்கும் அரிசியை ஒவ்வொரு மசூதியில் இருந்தும் வீடுகளுக்கு ஜமாத் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஏப்.19-க்குள் பள்ளிவாசல்களுக்கு நோம்புக்கஞ்சிக்கான அரிசி வழங்கப்படும். தகுதியான குடும்பங்களுக்கு தேவையான அரிசியை மசூதி நிர்வாகிகள் வழங்குவர் எனவும் கூறியுள்ளார்.



இந்த மாத இறுதியில் ரமலான் நோன்பு ஆரம்பமாக உள்ளது 


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback