சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு மனு தாக்கல்
அட்மின் மீடியா
0
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தங்களையும் மனுதாரராக சேர்த்து கொள்ள மனு தாக்கல் செய்ய உள்ளதாக ஜநா தெரிவித்துள்ளது.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் வழக்குகள் தொடுத்துள்ளார்கள் இதுவரை CAA சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 143 மனுக்கள் தாக்கல் செய்யபட்டுள்ளது அவை அனைத்தும் விசாரனையில் உள்ளன
இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்ய முன்வந்ததுள்ளது
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும், அதில், மனித உரிமை சார்ந்து உலக நாடுகளின் அரசுகள் கொண்டுவரும் கொள்கை முடிவுகளில் ஐ.நா. மனித உரிமை சார்பில் கருத்துகளை முன்வைக்க வழிவகை செய்து வருகிறோம். அதன் அடிப்படையிலயே இந்த மனுவும் தாக்கல் செய்யப்படுகிறது.
நிச்சயம் உள்நாட்டு விஷயத்தில் நாம் தலையிடப் போவதில்லை. புதிய கொள்கை மூலம் மனித உரிமைமீறல்கள் நடைபெறாது என்பதை உறுதி செய்வதில் மட்டுமே எங்களது கவனம் இருக்கும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.
நிச்சயம் உள்நாட்டு விஷயத்தில் நாம் தலையிடப் போவதில்லை. புதிய கொள்கை மூலம் மனித உரிமைமீறல்கள் நடைபெறாது என்பதை உறுதி செய்வதில் மட்டுமே எங்களது கவனம் இருக்கும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.
ஆனால் இது குறித்து மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்விவகாரம், இதில் வெளிநாட்டைச் சேர்ந்த எந்த அமைப்பின் நிலைப்பாட்டையும் இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மனு தாக்கல் செய்வது குறித்த விஷயத்தில் இந்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் நேரடியாக தனது எதிர்ப்பை திட்டவட்டமாகப் பதிவு செய்துவிட்டது.
Tags: முக்கிய அறிவிப்பு