புதுச்சேரியில் நாளை 22.03.2020 முதல் மார்ச் 31- வரை 144 தடை உத்தரவு
அட்மின் மீடியா
0
கொரோனா பரவலை தடுக்க புதுச்சேரியில் நாளை 22.03.2020 முதல் மார்ச் 31- வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாஹோவில் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் புதுச்சேரியிலும் 144 தடை அமலாகிறது
புதுச்சேரி மாநிலத்தில் நாளை 22 ஆம் தேதி மட்டும் ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை 23 ஆம் தேதி முதல் 31 தேதி வரை 144 தடை உத்தரவு மட்டும் புதுச்சேரி மாநிலத்தில் அமலில் இருக்குமென முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் திறந்திருக்கும். இந்த குறிப்பிட்ட நாளில் 5 நபர்களுக்கு மேல் ஒன்று கூடக்கூடாது என்ற 144 தடை உத்தரவு மட்டும் அமலில் இருக்கும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்கள்.
Tags: முக்கிய அறிவிப்பு