Breaking News

CAA,NRC பீகாரில் அமல்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது

அட்மின் மீடியா
0
கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து  நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 
இந்த சட்டத்தினை தங்கள் மாநிலத்தில் அமல் படுத்தமாட்டோம் என பல மாலநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்

அந்த வகையில் குடியுரிமை சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என பீகார் அரசும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும் பீகார் சட்டமன்ற கூட்டத்தில், தேசிய குடிமக்களின் பதிவேட்டை (என்.ஆர்.சி) செயல்படுத்தக்கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதேபோல தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்.பி.ஆர்) அதன் 2010 வடிவத்திலேயே செயல்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Give Us Your Feedback