ஐஎஸ் பயங்கரவாதிகள் எய்ட்ஸ் கிருமியை பரப்புவதாக தமிழக போலீசார் எச்சரிக்கை செய்தி உண்மையா?
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இலவச ரத்தப் பரிசோதனை செய்கிறோம் என்று கூறி எய்ட்ஸ் நோயை ஐ.எஸ் பயங்கரவாதிகள் பரப்பி வருகின்றார்கள் அது போல் உங்கள் வீட்டிற்க்கு வந்தால் விரட்டியடியுங்கள் என ஒரு செய்தியினை பலர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்தசெய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
மேலே உள்ள செய்தி பொய்யானது ஆகும்
யாரும் நம்பவேண்டாம்
இது போல் சம்பவம் எங்கும் நடக்கவில்லை
அப்படியானால் உண்மை என்ன
இந்த வதந்தி செய்தி குறிப்பிட்ட கால இடைவெளியில் அடிக்கடி சமூக வலைதளங்களில் பரவலாக ஷேர் செய்யபடுகின்றது
இதற்க்கு முன்னதாக அட்மின்மீடியாவும் பறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது அதனை படிக்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க
முதலில் காவல் துறை என்ற பெயரில் பொய் செய்தியை பரப்பி பொதுமக்களிடையே பீதியை உருவாக்குபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இந்த செய்தி ஒரு வதந்தியானது யாரும் நம்பவேண்டாம் என தமிழக காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது
https://www.facebook.com/tnpoliceofficial/photos/a.1660780884226979/2236774936627568/?type=3&theater
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி