பிப்ரவரி 14 இன்று மாவீரன் பகத்சிங் தூக்கில் இடப்பட்ட நாள் என்பது உண்மையா?
அட்மின் மீடியா
0
பிப்ரவரி 14 என்றால் காதலர் தினம் என்றே நினைவுக்கு வரும். ஆனால் 14.02.1931 அன்று லாகூரில் பகத்சிங் தூக்கிலிட்டு கொல்லப்பட்டார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். என்று ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
இந்த செய்தி ஆண்டுதோறும் பலராலும் ஷேர் செய்யப்படுகின்றது ஆனால் உண்மையில்லை
மாவீரர் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய 3வருக்கும் லாகூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 23.03.1931-ம் தேதியன்று இரவு 7.15 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.
அட்மின் மீடியா ஆதாரம்:- விக்கி பீடியா
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி