Breaking News

பெற்றோரைக் கைவிடும் அரசு ஊழியர்களின் 15% சம்பளம் பிடித்தம் செய்து அவர்களது பெற்றோருக்கு வழங்கப்படும் - தெலங்கானா முதலமைச்சர் எச்சரிக்கை!

அட்மின் மீடியா
0

பெற்றோரைக் கைவிடும் அரசு ஊழியர்களின் 15% சம்பளம் பிடித்தம் செய்து அவர்களது பெற்றோருக்கு வழங்கப்படும் - தெலங்கானா முதலமைச்சர் எச்சரிக்கை!



பெற்றோரைக் கைவிடும் அரசு ஊழியர்களின் 15% ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு, அவர்களது பெற்றோருக்கு வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடும் எச்சரிக்கை!

ஹைத​ரா​பாத் பிரஜா பவனில் நேற்று ‘பால பரோ​சா’ மற்​றும் ‘பிரணய் டே கேர்’ எனும் இரு புதிய திட்​டங்​களை தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்​தார். 

அப்​போது அவர் மாற்றுத் திற​னாளி​களுக்கு ரூ.50 கோடி மதிப்​புள்ள உபகரணங்​களை வழங்​கி​னார். இதில் அவர் பேசும்​போது, இந்த அரசு உங்​களுக்​காக உள்​ளது என்​பதை உரக்க கூறவே இந்த திட்​டங்​களை கொண்டு வந்​துள்ளோம். மாற்றுத் திற​னாளி​கள் ஒரு​வருக்​கொரு​வர் திரு​மணம் செய்து கொண்​டால் அந்த ஜோடிக்கு அரசு தரப்​பில் ரூ.2 லட்​சம் நிதி உதவி வழங்​கப்​படும். அதே சமயத்​தில் மாற்றுத் திற​னாளியை திரு​மணம் செய்​பவருக்கும் ரூ.2 லட்​சம் வழங்கப்​படும். 

பிரணய் திட்​டம் மூலம் முதி​யோரை நல்ல வழி​யில் பாது​காக்க இந்த அரசு தீர்​மானித்​துள்​ளது. இதனால் இனி பெற்​றோரை ஒதுக்கி வைத்​தாலோ, அனாதை இல்​லங்​களில் சேர்த்​தாலோ, கைவிட்​டாலோ அரசு ஊழியர்​களின் ஊதி​யத்​தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் வரை மாதா​மாதம் பிடித்​தம் செய்​து, அப்​பணத்தை கைவிடப்​பட்ட பெற்​றோருக்கு வழங்க ஏற்​பாடு செய்​யப்​படும். 

பெற்​றோரை கைவிடு​பவர்​களை நாம் தான் வழிக்கு கொண்டு வர வேண்​டும். பெற்​றோருக்கு உபயோகப்​படா விட்​டால், அவர்​கள் இந்த சமூகத்​துக்கு எப்​படி உபயோகப்​படு​வார்​கள்? என்றார்.


Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback