கன்னியாகுமரியில் சாலையில் சென்ற பிரமாண்ட மலைப்பாம்பு என பரவும் வீடியோ - உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கன்னியாகுமரியில் இரவு நேரத்தில் சாலையில் மலைப்பாம்புகள் செல்வதாகப் பரவும் வதந்தி!
பரவும் செய்தி
கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக் குளம் சாலையில் ராட்சத பாம்பு ஊர்ந்து செல்வதாகக் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இது தவறான தகவல்.
இந்தக் காணொளி தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல.
கடந்த 2022 ஆம் ஆண்டு கேரள மாநிலம் வயநாட்டில் ராட்சத பாம்பு சாலையைக் கடந்து செல்வதாகக் குறிப்பிட்டு இதே காணொளியைத் தனியார் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இதை கன்னியாகுமரி என்று திரித்து வதந்தியாக பரவுகிறது என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு அறிவித்துள்ளது
Tags: FACT CHECK மறுப்பு செய்தி