Breaking News

அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கட்சியிலிருந்து நீக்கம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கட்சியிலிருந்து நீக்கம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு



கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர்

'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் வடக்கு மாவட்டம்

கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. K.S.விஜயகுமார், Ex. M.L.A., (மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், எல்லாபுரம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என அறிவித்துள்ளார்.

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து இயக்கத்தில் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான விஜயகுமார் கையெழுத்திட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback