Breaking News

கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் ஜேசிபியைக் கொண்டு இடித்துத் தள்ளிய ஓட்டுநர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் ஜேசிபியைக் கொண்டு இடித்துத் தள்ளிய ஓட்டுநர் வைரல் வீடியோ



உத்தரப்பிரதேச மாநிலம் டெல்லி-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹாபூரில் சுங்கச்சாவடியில் நேற்று ஜே.சி.பி. ஒன்று கடக்க முயன்றது. அப்போது, அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள்,  மற்ற வாகன ஓட்டிகளிடம் கேட்பதை போல், இந்த ஜேசிபி டிரைவரிடமும் சுங்க சாவடி பணியாளர்கள் கட்டணத்தை கேட்டுள்ளனர். இதற்கு அவர் தர மறுத்துள்ளார். 

இது வாக்குவாதமாகி ஒரு கட்டத்திற்கு மேல் கைகலப்பாகி உள்ளது.இதில் மிகுந்த கோபமடைந்த ஜேசிபி டிரைவர் வாகனத்தை ஸ்டார்ட் செய்து அங்கிருந்த இரு கட்டணம் வசூலிக்கும் அறைகளை அடித்து துவம்சம் செய்துள்ளார். 

இதில் ஆத்திரமடைந்த அந்த டிரைவர் திடீரென ஜே.சி.பி. மூலம் சுங்கச்சாவடியைத் தகர்க்கத் தொடங்கினார்.

இதனால் அங்கு செயல்பட்டு வந்த இரண்டு கட்டணம் வசூலிக்கும் மையங்கள் தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் பதிவுசெய்தனர். இந்த சம்பவத்திலும் யாருக்கும் காயங்கள் இல்லை இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக ஹாபூர் மாவட்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜே.சி.பி. டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/AshwiniSahaya/status/1800435115086254592

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback