Breaking News

ரூ.15 லட்சம் காரை மீன் விற்பனை செய்ய தந்தைக்கு பரிசளித்த மகன்

அட்மின் மீடியா
0

இராமநாதபுரத்தில் மீன்பிடி தொழில் செய்யும் தந்தைக்கு மீனை ஏற்றிச்சென்று விற்பதற்காக சொகுசு கார் வாங்கி தந்த மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.



இராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன் வயல் பகுதியை சேர்ந்த சிவானந்தம்- காளியம்மாள் தம்பதி வசித்து வருகின்றார்கள் அவர்கள் அந்த பகுதியிலுள்ள குளம்,கண்மாயில் மீன்பிடித்து விற்பனை செய்து தங்களுடைய பிள்ளைகளை படிக்க வைத்தனர்.

சிவானந்தத்தின் இளைய மகன் மகன் சுரேஷ் கண்ணன், மரைன் இஞ்சினீரிங் படித்து முடித்து வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். தன்னை கஷ்டபட்டு படித்து ஆளாக்கிய தாய் தந்தை பாரத்தை குறைக்கும் விதமாக மீன்களை எடுத்து சென்று விற்பனை செய்ய 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஸ்விப்ட் கார் ஒன்றை வாங்கி தந்துள்ளார்

சிவானந்தம்- காளியம்மாள் தம்பதியினர், தற்போது சிவானந்தம் மீன்களை எடுத்து சென்று வியாபாரம் செய்து வருகிறார்கள் வறுமை நிலையிலும் கடினமாக உழைத்து படிக்க வைத்து ஆளாக்கிய தாய்-தந்தையின் வலியை உணர்ந்து, அவர்கள் எளிதாக சென்று வேலை பார்ப்பதற்காக மகன் சொகுசு கார் வாங்கி கொடுத்திருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தையும் பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback