Breaking News

பள்ளிகள் திறப்பு தள்ளி போகிறதா? இன்று வெளியாகும் அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும்  ஜூன் 1-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 

1ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது


இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த நில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

மேலும் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியும், தமிழக அரசின் வருவாய்த்துறையும் அறிவுறுத்தியுள்ளன.

இந்நிலையில் ஜுன் 1ம் தேதி அரசுப் பள்ளிகளை திறப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது. பெரியவர்களே வெளியில் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தும் சூழலில், அரசுப் பள்ளிகளை ஜுன் 1ஆம் தேதி திறப்பது எந்த வகையில் நியாயமா? பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என ராமதாஸ், சீமான் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.ஆனால், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார். 

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்;- 

வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட கல்வி அலுவலருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய நிலையில் 

ஒட்டுமொத்தமாக ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என ஆலோசிக்கப்பட்டதாகவும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி  கூறியுள்ளார்

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback