Breaking News

மாசி மகத்தை முன்னிட்டு தமிழகத்தில் மார்ச் 7 ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் மார்ச் 7 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

 


தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயத் தேர்திருவிழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயத் தேர்திருவிழா வருகிற மார்ச் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனால் அன்றைய தினம் தேன்கனிக்கோட்டை, ஓசூர், சூளகிரி மற்றும் அஞ்செட்டி ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 18 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் உள்ளூர் விடுமுறை அன்று ஓசூர் கோட்டத்திற்கு உட்பட்ட கருவூலங்களும், சார் நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலகங்களை கவனிக்க, குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மாசிமக திருவிழாவினை முன்னிட்டு புதுவை மற்றும் காரைக்காலில் நாளை (மார்ச் 07) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறையின்றி செய்முறை பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback