Breaking News

2வது தர்மயுத்தம் தொடங்கிவிட்டது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இரண்டாவது தர்மயுத்தம் தொடங்கியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 87 மாவட்ட செயலாளர்கள், 176 ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக தொடங்கிய காலம் முதல் தற்போது உள்ள நிலை வரை கடந்த வந்த பாதைகளை விவரித்தார். திராவிடர் காலமாக இருந்து, அதன் அதன் பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களால் பரிணாம வளர்ச்சி கண்டு உள்ளது அதிமுக. அதன் பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகள் கொண்டு வரப்பட்டன என்பதை சுட்டிக்காட்டியவர்,.

தேர்தல் ஆணையத்திலும் இந்த ஆவணங்கள்தான் உள்ளன. அதிமுகவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை நீக்க, தொண்டர்களுக்குத்தான் அதிகாரம்; மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு இல்லை என்றே கட்சியின் அடிப்படை விதிகளை எம்.ஜி.ஆர். வகுத்தார். எந்த அளவுக்கு அதிமுகவின் சட்டவிதிகளை சிதைக்க முடியுமோ, அந்த அளவுக்கு சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் சட்ட விதிகளை சிதைத்தனர். சர்வாதிகாரத்தின் உச்ச நிலைக்கு சென்று 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படும் என அறிவித்தனர். 

நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேலாக, மக்களின் தீர்ப்பு என ஒன்று இருக்கிறது, கூடிய சீக்கிரம் அது வரும்; நாம் தர்மத்தின் பக்கம், நியாயத்தின் பக்கம் சென்றுகொண்டிருக்கிறோம். அதிமுகவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று உங்களுக்கு தெரியும்; அவரது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன். அந்த தகுதியை அவர் இழந்துவிட்டார். 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய சட்ட விதியை காப்பாற்ற இரண்டாவது தர்மயுத்தம் துவங்கியுள்ளது என பேசிய ஓபிஎஸ், “சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என்றார்.மேலும், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்றும் , மாவட்ட அளவில் ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, கிளை அளவுகளில் நிர்வாகிகளை நியமிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பின்னர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பிறந்த நாட்களோடு அதிமுகவின் பொன்விழாவையும் சேர்த்து முப்பெரும் விழாவாக மார்ச் மாதம் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தன் இரும்பு பிடிக்குள் கட்சியை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நடத்திய நாடகம் தோல்வியில் முடிந்தது. எதற்கும் அஞ்சாமல் துணிந்து நில்லுங்கள் முன்வரிசையில் நாங்கள் நின்று, எதிர்வரும் கணைகளை தாங்கி உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம் என்று பேசினார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback