முதல்முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள நடமாடும் சுடுகாடு! ஒரு மணி நேரத்தில் அஸ்தி!
தமிழ்நாட்டில் முதல் முறையாக ஈரோட்டில் நடமாடும் மயான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மரணம் குறித்த தகவல் கொடுத்துவிட்டால் வீட்டுக்கே மயான வாகனத்தை கொண்டு வந்து சடலத்தை எரியூட்டி ஒரு மணி நேரத்தில் அஸ்தியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான கட்டணம் ரூபாய் 7500 என்றும் இந்த கட்டணத்தை செலுத்தி விட்டால் ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து பிணத்தை எரித்து அஸ்தியை கொடுத்து விட்டு சென்று விடுவார்கள்
இந்த நடமாடும் எரியூட்டும் வாகன சேவையை ஈரோடு மாநகராட்சியுடன் ஈரோடு ரோட்டரி ஆத்மா மின் மயான அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் முதல் முறையாக கிராமங்களுக்கும் சென்று சேவையளிக்கும் வகையில்
நடமாடும் இடுகாடு வசதி தொடங்கப்பட்டுள்ளது.மாநகராட்சியுடன் இணைந்து ஆத்மா
அறக்கட்டளை அமைப்பு இந்தத் திட்டத்தைத் துவங்கியுள்ளது.
மேலும் இந்த நடமாடும் மயான சேவையின் சாதக பாதகங்களை ஆராய்ந்து மாநிலம் முழுவதும் ரோட்டரி சங்கங்கள் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் இதை விரிவுபடுத்த உள்ளதாகவும் ஆத்மா அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்