தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று…! கடந்த 10 நாள் புள்ளிவிவரம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மீண்டும் கொரானா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 208பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பொதுவாக சென்னை, செங்கல்பட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் சென்னையில் 286 பேர், செங்கல்பட்டில் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
தமிழக சுகாதார துறையின் கடந்த 10 நாள் புள்ளிவிவரம்:-
17Jun : 589
16Jun: 552
15Jun: 476
14Jun: 332
13Jun: 255
12Jun: 249
11Jun: 217
10Jun: 219
09Jun: 185
08Jun: 195
07Jun: 144
Tags: கொரானா செய்திகள் தமிழக செய்திகள்