Breaking News

50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை ராகுல் காந்திக்கு எழுதி வைத்த மூதாட்டி!

அட்மின் மீடியா
0

காங்கிரஸ் தலைவரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதாக கூறி,ராகுல் காந்தியின் பெயருக்கு வீடு, தங்க ஆபரணங்கள் உட்பட தனது முழு சொத்தையும் எழுதி வைத்துள்ளார் ஒரு மூதாட்டி


உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த 78 வயது மூதாட்டியான புஷ்பா முன்ஜியால் இவர் தனது 50 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துகளையும், 1116 கிராம் தங்கத்தையும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளார். 


ராகுல் காந்தியின் எண்ணங்களால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், அதனால்தான் தனது சொத்தை அவருக்கு வழங்குவதாகவும் கூறிய புஷ்பா முன்ஜியால், ராகுல் காந்தியும், அவரது யோசனைகளும் நாட்டுக்கு அவசியம் எனவும் விவரித்தார். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரை நாட்டின் முன்னேற்றத்திற்காக ராகுல்காந்தியின் கும்பம் பலத் தியாகங்களை செய்துள்ளதாகவும் புஷ்பா முன்ஜியால் கூறியுள்ளார். 


வீடியோ பார்க்க:-

https://twitter.com/INCTamilNadu/status/1510972296189837315

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback