Breaking News

அமீரக பாலைவனத்தில் நெல், வயல் மற்றும் கேரளா கிராமத்தை உருவாக்கிய வாலிபர்

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜாவில் உள்ள அல்ஜுபைர் பாலைவனத்தில் நெல், காய்கறி வயல் மற்றும் நீர்நிலைகளுடன் கேரளா கிராம அமைப்பை உருவாக்கியுள்ளார் சுதீஷ் குருவாயூரி மேலும் அந்த இடத்திற்க்கு 'பசுமை சொர்க்கம் என பெயரிட்டுள்ளார்

 

 

அமீரகத்தை சேர்ந்த ஒருவரிடம் 3.5 ஏக்கர் நிலத்தினை 20 வருடம் குத்தகை எடுத்து அங்கு ஒரு இந்திய ஸ்டைல் கேரள கிராமத்தை உருவாக்கியுள்ளார்

ெல் வயலின் நடுவே ஓலைக் குடிசை. மேலிருந்து ஒரு நீர்வீழ்ச்சியுடன் ஒரு மேட்டின் மீது ஒரு பழமையான கெஸெபோ கூடாரம். பாரம்பரிய மரப் படகு, மீன் மற்றும் நீர் அல்லிகள் கொண்ட பெரிய குளம். ஒரு வயலில் விளையும் பல்வேறு காய்கறிகள் மற்றும் மையத்தில் தண்ணீர் கொண்ட கிணறு.என உங்களை ஒரு கிராமத்திற்க்குள் இருப்பது போன்ற உணர்வையே தரும் வகையில் உருவாக்கியுள்ளார். இந்த அழகிய நிலப்பரப்பில் சுமார் 30 வகையான காய்கறிகள் மற்றும் மூலிகைகள் பயிரிடப்படுகின்றன. இந்த பசுமையான பண்ணையில் ஏராளமான பறவைகளும் காணப்படுகின்றன.

 news source:-

https://gulfnews.com/uae/watch-indian-expat-recreates-kerala-village-setting-with-paddy-vegetable-fields-and-water-bodies-in-uae-1.85272228

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback