Breaking News

இன்று இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

அட்மின் மீடியா
0

 குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய இலங்கை கடற்‌ பகுதியில்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி....



27.11.2021: ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய அதி கன மழையும்‌, 

சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, திருவண்ணாமலை, வேலூர்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்‌, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, 

திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்சி, சேலம்‌, நாமக்கல்‌, திருப்பூர்‌, ஈரோடு, கோயம்புத்தூர்‌, நீலகிரி, தென்காசி, கடலூர்‌, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை,காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, 

ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.


28.11.2021:வட கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்சி, சேலம்‌, தர்மபுரி, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.


29.11.2021: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஒரு சல இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, தென்காசி, மதுரை, விருதுநகர்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.


30.11.2021: தூத்துக்குடி, ராமநாதபுரம்‌, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌


01.12.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 28 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌

மீனவர்களுக்கு எச்சரிக்கை:வங்க கடல்‌ பகுதிகள்‌:27.11.2021, 28.11.2021: குமரிக்கடல்‌, தென்மேற்கு வங்கக்‌ கடல்‌ மற்றும்‌ தென்‌ தமிழக கடலோரப்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. 

காற்றழுத்த தாழ்வு நிலை

வரும்‌ 29 ஆம்‌ தேதி தெற்கு அந்தமான்‌ கடற்பகுதியில்‌ புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும்‌ வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில்‌ நகரக்கூடும்‌ இதன்‌ காரணமாக 29.11.2021, 30.11.2021, அந்தமான்‌ கடற்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று 40 முதல்‌ 5௦ கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

01.12.2021: தென்கிழக்கு வங்கக்‌ கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல்‌ பகுதிகள்‌, அந்தமான்‌ கடற்‌பகுதிகளில்‌ சூறாவளி காற்று 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, இடையிடையே 6௦ கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌

வானிலை ஆய்வுமைய அறிக்கை:-

http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback