அக்டோபர் 1 முதல் மதுரை - துபாய் விமான சேவை - முன்பதிவை தொடங்கிய ஸ்பைஸ்ஜெட்!
அட்மின் மீடியா
0
கொரோனா காரணமாக சர்வதேச விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதால் மதுரை - துபாய் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
அக்டோபர் 1 முதல் மதுரை - துபாய் இடையே விமான சேவையை தொடங்குவதாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது மேலும் பயண முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.
வாரத்தில் வாரத்துக்கு 3 நாட்கள் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துபாயிலிருந்து மதுரைக்கும், ஞாயிறு, புதன், வெள்ளிக்கிழமைகளில் மதுரையிலிருந்து துபாய்க்கும் விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்