Breaking News

பணம் இல்லாததால் உயர் கல்வி பயில முடியவில்லையா? கல்வி உதவி மற்றும் வழிகாட்டி மையம்

அட்மின் மீடியா
0
மாணவ, மாணவிகளே! பொருளாதார வசதியின்மையால்  உங்களுக்கு ஆரம்பக் கல்வி அல்லது உயர் கல்வி பயில உங்களுக்கு  தடையாக உள்ளதா? கவலை வேண்டாம்!!
 

ராமநாதபுரத்தில் டாக்டர் இ.எம். அப்துல்லா அவர்களால் துவங்கப்பட்டு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் சார்ந்த சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் செய்யது அம்மாள் அறக்கட்டளை தற்போது பெற்றோரை இழந்த குழந்தைகள், கணவனால் கைவிடப்பட்டோர். கணவரை இழந்தோர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வோரின் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி முதல் உயர்க்கல்வி வரை பயில நிதி உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்க செய்யது அம்மாள் கல்வி உதவி மற்றும் வழிகாட்டி மையம் துவங்கப்பட்டுள்ளது.

LKG முதல் பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு தகுதியின் அடிப்படையில் நிதி உதவிகள் வழங்கப்படும்.

நீங்கள் விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

1.ஆதார் கார்டு.

2. குடும்ப அட்டை.

3.ஆண்டு வருமானச் சான்றிதழ்.

4. மதிப்பெண் சான்றிதழ்.

5.புகைப்படம் - 3.

 
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

ராசி ஸ்கேன்ஸ் 2வது தளம்.
தலைமை தபால் நிலைய அலுவலக ரோடு, 
இராமநாதபுரம் -623501

தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்:
 
78688 21984
 
99435 46569
 
98940 44944

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback