BREAKING: 10,11,12-ம் வகுப்பு தேர்வு அடிப்படையில் CBSE 12ம் வகுப்பு மதிபெண்கள் கணக்கீடு செய்யப்படும்
கொரோனா இரண்டாவது அலை காரணமாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ததை உச்ச நீதிமன்றம் வரவேற்றது. மேலும் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது என்பதை இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ-க்கு கடந்த 3-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, மதிப்பெண் வழங்கும் நடைமுறையை குறித்து பரிந்துரை செய்த 13 பேர் கொண்ட குழுவை சிபிஎஸ்இ நியமித்தது. இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் அந்த குழுவானது அறிக்கை அளித்துள்ளனர்.அதில்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 5 பாடங்களில் நடைபெற்ற தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற மூன்று மதிப்பெண்களில் 30 சதவீத மதிப்பெண்களும்,
11 வது வகுப்பில் வகுப்பில் பாடங்களில் 30 சதவீத மதிப்பெண்களும்,
12-ம் வகுப்பில் யூனிட், பருவத் தேர்வு, செய்முறைத் தேர்வு மதிப்பெண்களில் 40 சதவீதம் மதிப்பெண்களும்
என வெயிட்டேஜ் முறையில் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கக்கப்படும் என சிபிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வுக்கு 100 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்
12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூலை 31-ம் தேதி வெளியாகும்.
மதிப்பெண் பட்டியல் வெளியான பிறகு சில மாணவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று கருதினால், அவர்களுக்குத் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்