Breaking News

நாளை இந்த 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0
நாளை இந்த 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம்



இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்க்கு தமிழகத்தில் 


12.01.2021 ம் தேதி 

 திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிககனமழை பெய்யும். விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

13.01.2021  மற்றும் 14.01.2021 ம்தேதி

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் ஒரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை

http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback