Breaking News

FACT CHECK: செம்பு பாத்திரத்தில் தேங்காய் தண்ணீர் குடிக்கலாமா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  செம்பு பாத்திரத்தில் வைத்திருந்த தேங்காய் தண்ணீரை குடித்தவர் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார் காரணம் தேங்காய் தண்ணீரில் உள்ள அமிலமும் தாதுக்களும் செம்புடன் கலந்து தேங்காய் தண்ணீர் காப்பர் சல்பேட்டாக மாற்றியதே. ஆகவே செம்பு பாத்திரத்திலிருந்து தண்ணீர் தவிர வேறு எந்த திரவத்தையும் ஊற்றி வைக்காதீர்கள்  என்று  ஒரு செய்தியினை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என்று கேள்வி பட்டுள்ளோம். ஆனால் இது கொஞ்சம் புதுசா இருக்கே இது உண்மையா பொய்யா என  ஆய்வு செய்து பார்த்தோம்


அதில் மேலே சொல்லப்படுவது போல் காப்பர் பட்டிலில் உள்ள தேங்காய் தண்ணீர் காப்பர் சல்பேட்டாக மாறாது என்பதே உண்மை

அறிவியல் பூர்வமாக

காப்பர் சல்பேட் நச்சுத்தன்மை உடையது என்பது உண்மை

ஆனால்  அறிவியல் பூர்வமாக காப்பர் ஆனது காப்பர் சல்பேட் ஆக மாற சல்ஃப்யூரிக் அமிலம் தேவைப்படுகிறது.

அந்த

தேங்காய் தண்ணீரில் பல சத்துக்கள் உள்ளன ஆனால் அதில் காப்பர் சல்பேட், மற்றும் சல்ப்பியூரிக் அமிலம் இடம் பெறவில்லை

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


https://en.wikipedia.org/wiki/Coconut_water







Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback