Breaking News

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு


ஆன்லைன் வகுப்புகளுக்கு  எதிராக சரண்யா, பரமேஸ்வரன் என்பவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் வகுப்புகளால் பள்ளி மாணவர்கள் கண் பாதிக்கப்படுவதாகவும் மேலும் ஆன்லைன் வகுப்புகளால் ஆபாச இணையத்தளங்களை பார்க்க நேரிடும் எனவும் எனவே ஆன்லைன் வகுப்புக்கு தடைவிதிக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


அந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில்

ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை இல்லை எனவும் மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து  பள்ளிகளும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் 

மேலும் ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை முறையாக பின்பற்ற வேண்டும்  

மேலும் விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback