Breaking News

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் 17 - ம் தேதி முதல் துவக்கம் !! அமைச்சர் செங்கோட்டையன்...

அட்மின் மீடியா
0
அரசு பள்ளிகளில் 1, 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆக.,17 முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.







சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னும் தணியவில்லை. இதனால் தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியமே இல்லை. கொரோனா தாக்கம் குறைந்ததும், மாணவர்களின் பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்டு ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக  முதல்வர்  அறிவிப்பார் எனவும்

2020-21 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அனைத்து வகை பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு, 6 ஆம் வகுப்பு, மற்றும் 9 ஆம் வகுப்புகளில் வரும் 17 ஆம் தேதி முதல்  தொடங்கும் எனவும்

11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை ஆக.,24ல் நடைபெறும். என  அவர் கூறினார்

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback