ஆக.15ல் கிராமசபை கூட்டம் நடைபெறாது- தமிழக அரசு
அட்மின் மீடியா
0
இந்தாண்டு ஆகஸ்டு 15 ம் தேதி அன்று கிராம சபை கூட்டம் நடைபெறாது.! தமிழக அரசு அறிவிப்பு
தற்போது கொரோனா தாக்கம்அதிகரித்து வருவதால் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடினால் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என கருதி இந்தாண்டு கிராம சபை கூட்டம் நடைபெறாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் செலவுகள், திட்ட பணிகள் போன்றவை குறித்து ஆலோசனை நடைபெறும் . வழக்கமாக குடியரசு தினம், சுதந்திர தினம், காந்திஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்