Breaking News

தமிழகத்தில் ஆகஸ்டு 10 ம் தேதி முதல் "ஜிம்" உடற்பயிற்சி கூடம் திறக்கலாம்

அட்மின் மீடியா
0


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களிடம் தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் (Tamil Nadu Gym Owners & Trainers welfare Association) சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ள உடற்பயிற்சி கண்களை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அக்கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பிறப்பித்துள்ளார் கள்
திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் பின்வருமாறு

மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க ஆகஸ்ட் 5ந்தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் தனியார் உடற்பயிற்சி கூடங்கள் (stand alone only), 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் 10.8.2020) முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல் முறைகள் Standard Operation Procedure) தனியாக வெளியிடப்படும் அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது

Give Us Your Feedback