தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில்கள் நாளை மறுநாள் முதல் ரத்து.! தெற்கு ரயில்வே அறிவிப்பு.!
அட்மின் மீடியா
0
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 7 சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே அனுமதி வழங்கியது. இதன்படி,
திருச்சி - செங்கல்பட்டு,
கோவை -காட்பாடி,
திருச்சி - செங்கல்பட்டு,
அரக்கோணம் -கோவை
கோவை -மயிலாடுதுறை
திருச்சி -நாகர்கோவில்,
தமிழகத்தில் மொத்தமாக இயக்கப்பட்டு வந்த இந்த 7 சிறப்பு ரயில்களும் நாளை மறுநாள் முதல் ஜூலை 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் இந்த ரயிலில் முன் பதிவு செய்தோர்க்கு முழு பணம் திரும்ப தரப்படும். எனவும் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு ஆட்டோமேட்டிக் ஆக பணம் refund செய்ய படும் என்றும் கவுண்டர் டிக்கெட் களுக்கு refund பயண தேதி முதல் ஆறு மாதம் வரை எப்போது வேண்டுமானாலும் PRS கவுண்ட்டர்களில் பெற்று கொள்ளலாம்.என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டாக்டர். எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் மற்றும் புது டெல்லி இடையே இயக்கப்படும் raajdhaani சிறப்பு ரயில் அட்டவணை படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழக அரசின் வேண்டுகோளின் படி தெற்கு இரயில்வே இயக்கும் கீழ் கண்ட சிறப்பு இரயில்கள் 29-6-2020 முதல் 15-7-2020 வரை ரத்து செய்ய படுகிறது. இந்த ரயிலில் முன் பதிவு செய்தோர்க்கு முழு பணம் திரும்ப தரப்படும். (1/2) pic.twitter.com/J4B1lKfWiH
— @GMSouthernrailway (@GMSRailway) June 27, 2020
Tags: தமிழக செய்திகள்