FACT CHECK: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகளின் புகைபடம் ? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள் என ஒரு புகைபடத்தை ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த புகைபடம் கடந்த 28.02..2019 ம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் நடந்த கும்பமேளாவிற்க்கு இயக்கப்பட்ட இந்த பேருந்துகளின் அணிவகுப்பு அது சுமார் 3.2கி.மீ தொலைவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் மூலம் உலகின் மிக நீளமான பேருந்துகளின் அணிவகுப்பு என கின்னஸ் சாதனை படைத்தது.
அதே சமயம் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 1000 பேருந்துகளை ஏற்பாடு செய்து தரப்படும் என அறிவித்தார் அதற்க்கு அம்மாநில அரசு தரப்பில் அதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டது.
எனவே 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய படத்தை எடுத்து, உ.பி தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பஸ் என்று தவறாக அனுப்புகின்றார்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி