சென்னைக்கு 2 நாட்கள் மட்டுமே ரயில் சேவை: ரயில்வே அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கொரானா ஊரடங்கு காரணமாக அனைத்து போக்குவரத்தும் நிறுத்தபட்டுள்ள நிலையில் மே.12 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
அதில் முதற்கட்டமாக டெல்லியிலிருந்து சென்னை உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ரயில்களை இயக்கப்படும் எனவும் ரயில்வே அறிவித்தது.
தமிழகத்தில் தற்போதைக்கு ரயில்சேவையை அனுமதிக்க வேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் சென்னைக்கு 14, 16 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு