Breaking News

நியூயார்க்கில் இஸ்லாமிய ஜிஹாதி மெட்ரோ ரயிலில் எச்சில் துப்பி கொரானாவினை பரப்பினாரா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
நியூயார்க்கில் இஸ்லாமிய ஜிஹாதி ஒருவர் மெட்ரோ ரயிலில் பயணி கதவு மூடும்போது எச்சில் துப்பி கொரானா பரப்புகின்றார் என ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையும் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த சம்பவம் 03.08.2019 அன்று நடைபெற்றுள்ளது


அந்த சம்பவம் அமெரிக்கா நியூயார்க்கில் மன்ஹாட்டனில் 34 வது தெருவில் இருக்கும் சுரங்க ரயிலில்  நடந்ததுள்ளது

அந்த சம்பவத்தில் உள்ளவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை என தெரிகின்றது

இந்த சம்பவம் எதனால் நடந்தது என போலிஸார் கருத்து சொல்ல மறுத்துவிட்டார்கள் என செய்திகளில் கூறபட்டுள்ளது 

எங்கோ எப்போதோ நடந்த ஒரு செய்தியினை இவர்கள் தான் செய்தார்கள் என திட்டமிட்டு பர்டப்பபடும் வெறுப்பு செய்திகள் சமூகவலைதளங்களில் தர்போது அதிகமாக பரவுகின்றது அந்த செய்திகளில் இதுவும் ஒன்று

அட்மின் மீடியா ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback