Breaking News

நாளை ஒரு நாள் மட்டும் சென்னையை 10 ரூபாயில் சுற்றிபார்க்கலாம்

அட்மின் மீடியா
0
ஜனவரி 16-ம் தேதி மாட்டுப் பொங்கலன்று ரூ.10 கட்டணத்தில் சென்னையில் பொதுமக்கள் சுற்றுலா செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மெரினா கடற்கரை - பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், கிண்டி சிறுவர் பூங்கா வரை சுற்றுலா செல்லலாம். 

ஜனவரி 16ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த சுற்றுலா பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி சுற்றுலாக்கழக அலுவலக வளாகத்தில் இருந்து பேருந்துகள் புறப்படும். சுற்றுலாப் பொருட்காட்சி (தீவுத்திடல்) தொடங்கி மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசண்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேரலாயம், அஷ்டலட்சுமி கோயில், அறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம்.
சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான 15 பேருந்துகள் இதற்காக இயக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகள் ஒரு இடத்தில் இருந்து அடுத்த சுற்றுலா மையத்திற்கு அழைத்து செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானலும் ஏறலாம், எங்கு வேண்டுமனாலும் இறங்கலாம்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback