Breaking News

அமெரிக்கா- ஈரான் போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியாகி உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை கையெழுத்தாகிறது. இதன் மூலம் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்றும், இருதரப்பு கடற்படை முற்றுகைகளும் வாபஸ் பெறப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்



அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் ஜூன் 19ம் தேதி கையெழுத்தாக உள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது நடத்திய அதிரடித் தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக மிக பயங்கரமான போர் பதற்றம் நிலவி வந்தது. 

இந்த மோதலைத் தொடர்ந்து உலக அளவில் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் ராணுவம் மூடி உத்தரவிட்டது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டு விலை கிடுகிடுவென உயர்ந்ததுடன் பல நாடுகளிலும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த விபரீத சூழ்நிலையில் பல்வேறு உலக நாடுகளின் கூட்டு முயற்சியால் தற்பொழுது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க தற்காலிக அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து அனைத்து நாடுகளின் வணிகக் கப்பல்களுக்கும் ஹார்முஸ் நீரிணையானது எவ்வித சுங்கக்கட்டணமும் இன்றி முழுமையாகத் திறக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

அதே நேரத்தில் ஈரானின் முக்கியத் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க கடற்படைகளும் உடனடியாகத் திரும்பப் பெறப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 14 முக்கிய அம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை 19-ம் தேதி சுவிட்சர்லாந்தில் வைத்து அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான 60 நாட்களுக்குள் இதில் உள்ள அனைத்து நிபந்தனைகளையும் இரு நாடுகளும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடுமையான பொருளாதாரச் சீர்குலைவை ஏற்படுத்தியதும், பல நாடுகளில் உயிரிழப்புகளுக்குக் காரணமானதுமான மேற்கு ஆசியப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தை நான் வரவேற்கிறேன்இந்தப் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தப்படுவது அப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தை உறுதி செய்யவும் உதவும் என்று இந்தியா நம்புகிறது.மீதமுள்ள விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒரு நிலையான இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback