தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நீக்கம் - மாணிக்கம் தாகூர் நியமனம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்டார் மாணிக்கம் தாகூர்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகையை மாற்றி, புதிய தலைவரை அறிவித்தது காங்கிரஸ்.புதிய தலைவர் நியமனம் உடனே அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
Mallikarjun Kharge appoints Lok Sabha MP B. Manickam Tagore as the new President of Tamil Nadu Pradesh Congress Committee (TNCC). He replaces K. Selvaperunthagai
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் செல்வப்பெருந்தகை மிகவும் உறுதியாக இருந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தரப்பான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்ற தலைவர்கள், தவெக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற டெல்லி மேலிடத்தின் விருப்பத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.
தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி தோல்வியைச் சந்தித்ததும், காங்கிரஸ் உடனடியாகத் தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து, புதிய அரசில் இரண்டு அமைச்சர் பதவிகளையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் கேட்டுப் பெற்றது. இந்த திடீர் கூட்டணி மாற்றத்தால், ஆரம்பம் முதலே திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த செல்வப்பெருந்தகை, கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அண்மையில் பெங்களூரில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்த செல்வப்பெருந்தகை, தன்னை தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கடிதம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: அரசியல் செய்திகள்