Breaking News

ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகை கட்டாயம் - வெளியான அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகை கட்டாயம் - வெளியான அறிவிப்பு

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. 

இதன்படி ரேஷன் அட்டையில் இடம் பெற்றிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைரேகை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்கள் ஆதார் அட்டையை இணைக்கும் போது, இரண்டிலும் பதிவாகி உள்ள கைரேகை ஒன்றாக பொருந்த வேண்டும். அப்போது தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும்

இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்ட அறிவிப்பில் “ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயமாக கைரேகை பதிவு செய்ய வேண்டும். ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக இணைத்து விட்டு, கைரேகை பதிவு செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் இறந்திருந்தால் அவர்கள் குறித்த அறிக்கையை உடனடியாக கூட்டுறவுத் துறைக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback