Breaking News

12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு வேலை வாய்ப்பு IAF Agniveervayu Recruitment 2025

அட்மின் மீடியா
0

இந்திய விமானப்படையில் 2025ஆம் ஆண்டு அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது இந்த பதவிக்குத் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் 18 வயதைக் கடந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Indian Air Force Agniveer Vayu Recruitment 2024
Indian Air Force Agniveer Vayu Recruitment 2025

இந்திய விமானப்படையில் அக்னிவீர் (வாயு) (OS) பணிக்கு ஆட்சேர்ப்பு பேரணி தாம்பரம் விமானப்படை வளாகத்தில் 02.09.2025 மற்றும் 05.09.2025 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளதாகவும், அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து கலந்து கொள்ளலாமெனவும் அதற்கான தகுதிகளாகப் பன்னிரண்டாம் வகுப்பில், (அனைத்து பிரிவும் தகுதியானது) ஆங்கிலம் மற்றும் பிற பாடங்களில் 50 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் எனவும், ஆண்/பெண் விண்ணப்பதாரர்கள் சதவீத

வயதுக்கு இதற்கான வயது வரம்பு 01.01.2026 அன்றுள்ளபடி 17 அதிகமாகவும், 21 வயதுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும் எனவும், மேலும், கூடுதல் தகவல்கள் முன்னணி நாளிதழ்களில் விரைவில் வெளியிடப்படும் எனவும். தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே. தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள நபர்கள் மேற்படி ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அக்னிபத் திட்டம் என்றால் என்ன?

இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் 4 ஆண்டுகள் ராணுவத்தில் குறுகிய கால வீரராக (முப்படையில் ஏதாவது ஒன்றில்) சேர முடியும்.

அக்னிபாத் திட்டத்தில் இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். 

4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.

விருப்பம் இல்லை என்றால் 4 வருடத்திற்கு பின் வெளியேறலாம் விருப்பம் உள்ளவர்கள் நிரந்தரமாக சேர விண்ணப்பிக்கலாம்

இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

பெண்கள், ஆண்கள் இரு பாலினரும் சேர முடியும் 17.5 - 21 வயது கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி.

இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

வருடம் செல்ல செல்ல சம்பளம் உயர்த்தப்படும்.

அதாவது 4வது வருடம் 40 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பளம் தரப்படும்.

வருமான வரி கிடையாது.

அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது. 

தனிப்பட்ட இன்சூரன்ஸ், 

மெடிக்கல் இன்சூரன்ஸ் வழங்கப்படும்.

இந்த 4 வருட ராணுவ பணி காலத்தில், ஏதாவது ராணுவ சண்டையில் காயங்கள் ஏற்பட்டால் அதற்கு 44 லட்சம் ரூபாய் வரை, காயத்தை பொறுத்து நிவாரணமாக வழங்கப்படும்.

அக்னிபாத் திட்டத்தின் கீழ்,இந்திய ராணுவத்தில் சேர  நேற்று முதல் அடுத்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அக்னிவீரர் தேர்வின் முதல் படியான பொதுத்தேர்வு ஏப்ரல் 17 முதல் 30-ந்தேதிக்குள் நாடு முழுவதும் சுமார் 180 மையங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேவையான ஆவணங்கள்:-

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், 

பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது 3 ஆண்டுகள் பொறியியல் டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ் அல்லது 2 ஆண்டுகள் தொழில்சார்ந்த படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ் அல்லது தொழில்சார்ந்த படிப்பல்லாத இரண்டு ஆண்டு ஆங்கிலம், இயற்பியல், கணிதம் படித்தவர்கள் மதிப்பெண் சான்றிதழ்

agneepath army apply date

agneepath scheme eligibility

agneepath scheme

agneepath scheme details

agneepath scheme apply online

agneepath scheme details qualification

agneepath scheme qualifications

Agneepath Scheme 2025 Details Pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback