சட்டபேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் முழு விவரம்
அட்மின் மீடியா
0
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு
- அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை அக்.1 முதல் அமல்
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு
- பண்டிகை கால முன்பணம் ரூ.10,000 இல் இருந்து ரூ.20,000ஆக உயர்வு
- அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பலன் பெறும் நடைமுறை அக்டோபரிலேயே அமல்
- அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்படுகிறது
- ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000இல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தப்படுகிறது
- பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவது தொடர்பாக அறிவிக்கப்பட்ட கமிட்டி செப்டம்பர் 30க்குள் அறிக்கை
- அரசு ஊழியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சம், கலை அறிவியலுக்கு ரூ.50,000 முன்பணம்
- சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை ரூ.1,000 ஆக உயர்வு
- பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை பெற மகப்பேறு விடுப்பு காலமும் இனி தகுதிக்கான காலமாக எடுத்துக் கொள்ளப்படும்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்