Breaking News

கார் பந்தயம் முடியும் வரை நடிக்க மாட்டேன்! - நடிகர் அஜித் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
அடுத்த 9 மாதங்களுக்கு சினிமாவில் நடிக்க மாட்டேன்; கார் ரேஸில் கலந்து கொண்ட நடிகர் அஜித் அறிவிப்பு



ரேஸ் முடியும் வரை நடிக்க மாட்டேன், கார் பந்தயம் நடைபெறாத அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில் மட்டுமே நடிக்க உள்ளதாக நடிகர் அஜித் பேட்டி!!

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் அஜித். இவரது நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன.

இந்த நிலையில், நடிகர் அஜித் துபாயில் நடக்கும் கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். இந்த ரேஸ் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. 

துபாயில் வருகிற 12 மற்றும் 13-ந் தேதிகளில் 20-வது சர்வதேச கார் பந்தயம் நடைபெறுகிறது. அதற்காக துபாய் வந்த நடிகர் அஜித்குமார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கான பயிற்சியை எடுத்து வருகிறார்

துபாய் ரேசின்போது பேட்டியளித்த நடிகர் அஜித்

கார் பந்தய தொடர் முடிவடையும் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன். எனது 18 வயதில் ரேஸிங் தொடங்கினேன், அதன் பின் சினிமாவில் நடித்து வந்ததால் பங்கேற்கவில்லை. 2010ஆம் ஆண்டு EUROPEAN-2 இல் களமிறங்கினேன்; பின்னர் பங்கேற்க முடியவில்லை. 

தற்போது ரேஸிங் தொடருக்கு ஒரு உரிமையாளராகவும் வந்துள்ளேன். ரேசிங் பயிற்சியில் ஈடுபட்டாலும், தொடர்ந்து படங்களில் நடிப்பேன்

2025 மார்ச் மாதத்திற்கு பிறகு தீவிரமாக ரேசிங்கில் ஈடுபட உள்ளென். மார்ச் மாதம் வரை சினிமா ஷூட்டிங்கில் பங்கேற்பேன். 2004 பார்முலா 3 போட்டியில் என்னால் முழுமையாக பங்கேற்க முடியவில்லை ஏன் என்றால் அப்போது நான் இரண்டு படகுகளை ஓட்டிக்கொண்டிருந்தேன். அதில் ஒன்று சினிமா, மற்றொன்று ரேஸிங்.” என்றார்.செம்டம்பர் மாதம் வரை நடப்பு கார் பந்தயம் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1877716178048594066

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback