டிசம்பர் 27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
படுகர் சமுதாய மக்களின் ஹெத்தை அம்மன் திருவிழாவையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு டிசம்பர் 27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஹெத்தையம்மன் திருவீதி உலா நடைபெறும்.
இதனால் டிசம்பர் 27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.டிசம்பர் 27 ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 6 ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்
டிசம்பர் 27 ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 6 ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்
அதேபோல் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வரும் 27ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்