FACT CHECK ரமலான் தொழுகையில் பூனை வந்த இமாம் மரணம் என பரவும் செய்தி உண்மையா? sheikh walid mehsus died fake
அல்ஜீரியாவில் உள்ள போர்ட்ஜ் அரேரஜ் நகரில் உள்ள பள்ளிவாசலில் இமாம் க்ஷேக் வாலித் மெக்சாஸ் இரவு நேர தராவீஹ் தொழுகை நடத்திக்கொண்டிருந்தார். ரமலான் காலம் என்பதால் அந்த தொழுகை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
தொழுகையின் போது பூனை ஒன்று திடீரென இமாம் மீது ஏறி அவரிடம் குறும்பு செய்தது.கிட்டத்தட்ட ஒரு நிமிட நேரம் குறும்பு செய்தது பூனை இடையூறு செய்தாலும் இமாம் தமது கடமையை சரியாகச் செய்தார்,அவர் பூனையை விரட்டாமல் அரவணைக்கிறார். அதேநேரத்தில் வழிபாட்டையும் நிறுத்தவில்லை.தொழுகைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இமாம் ஒரு கையால் பூனையைப் பாதுகாக்கிறார்.
மேலும் பூனைக்குட்டியை கூட செல்லமாக தடவி கொடுக்கின்றார் அந்த பூனை இமாமுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கின்றது வீடியோவின் முடிவில், பூனை மீண்டும் தரையில் குதிக்கிறது.பூனையிடம் அவர் அன்பாக இருந்ததையும் கண்டு சமூக ஊடகங்களில் மக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.அந்த வீடியோ இப்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வீடியோ முஸ்லிமல்லாதவர்களிடமும் மிகப்பெரும் வைரலாக மாறி உலகின் பல முன்னனி செய்தி நிறுவனங்கள் இதை ஒளிபரப்பியது. அனைத்து நாடுகளிலும் இச்செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
அல்ஜீரிய அரசின் மத விவகாரத்துறை அமைச்சகம் அந்த இமாமை அழைத்து அரசு சார்பாக கௌரவித்திருக்கிறது. இஸ்லாம் விலங்குகளிடமும் இரக்கத்துடன் நடப்பதை எந்தளவுக்கு வரவேற்கிறது என்பதை இமாம் அவர்களின் இந்த நடவடிக்கை மூலமாக உலகச் செய்தியாக மாற்றியதற்கு மகிழ்ச்சி தெரிவித்தது. வீடியோ பார்க்க:- https://twitter.com/Gerashchenko_en/status/1644279303658504198
இந்த நிலையில் அந்த இமாம் இறந்து விட்டார் என பலர் ஓர் செய்தியை தவறாக ஷேர் செய்து வருகின்றார்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி