Breaking News

மே 5 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம்

அட்மின் மீடியா
0

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே 5ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம் முகூர்த்த கால்நட்டுதல் விழாவோடு கோலாகலமாக துவங்கியது. வரும் மே மாதம் 5 ஆம் தேதி பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறும்.இந்த நிகழ்வை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளாமான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள். 

இந்த நிலையில் கள்ளழகர் எழுந்தருள கூடிய வைகை ஆற்று பகுதியில் மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர், மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்

அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் வரும் 5ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக உள்ளூர் விடுமுறை அளிப்பதாகவும் , பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விழாவிற்கு வருகை தருவதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் , மேலும் பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து செயல்படுத்தும் எனவும் தெரிவித்தார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback