Breaking News

ஜனவரி 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என பரவும் தகவல் உண்மையா

அட்மின் மீடியா
0
ஜனவரி 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என பரவும் தகவல் உண்மையா

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த 2 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு 

15-ம் தேதி பொங்கல், 

16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 

17-ம் தேதி காணும் பொங்கல் 

என்று 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பொங்கலுக்கு 4 நாட்கள் விடுமுறை எனவும் 18-ம் தேதி பொது விடுமுறை எனவும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.சில செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டு இருந்தது

இந்நிலையில், வரும் 18-ம் தேதி (புதன் கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தமிழ்நாட்டு அரசு ஏதும்  முடிவெடுக்கவில்லை எனவும் கூறினார். எனவே பொய்யான செய்தியினை யாரும் நம்பாதீர்கள்

Tags: FACT CHECK தமிழக செய்திகள்

Give Us Your Feedback