சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், கத்தார், சிங்கப்பூர், உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து யுபிஐயில் பணம் அனுப்ப அனுமதி
சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்ஹாங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவுதி, ஐக்கிய அரபு எமிரேட், இங்கிலாந்து ஆகிய 10 நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் யுபிஐயில் தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து பணம் அனுப்பலாம்.
வெளிநாடு வாழ் இந்தியா்கள் தங்களின் வெளிநாட்டு மொபைல் எண் பயன்படுத்தி இந்திய வங்கிக் கணக்கு யுபிஐ மூலம் பணப் பரிவா்த்தனையை செய்யலாம். இந்த சேவை விரைவில் தொடங்க உள்ளது.
என்பிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சிங்கப்பூா், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தாா், அமெரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் ஆகிய 10 நாடுகளில் வாழும் இந்தியா்கள் ரூபாயில் பணப் பரிவா்த்தனை செய்ய என்ஆா்இ அல்லது என்ஆா்ஓ வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, தங்களின் சா்வதேச கைப்பேசி எண்களை இணைத்து கொள்ள வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை ஏப்ரல் 30-க்குள் தயாா் நிலையில் வைத்து கொள்ள வேண்டும். அந்தந்த நாடுகளின் கைப்பேசி எண்ணின் முதல் இலக்கங்களை வைத்து பணப் பரிவா்த்தனை செய்ய அனுமதி அளிக்கப்படும். விரைவில் பிற நாடுகளுக்கும் இது விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்