சாக்லேட்டை திருடி ஒளித்து வைத்துள்ளார்கள் எனது அம்மாவை சிறையில் போடுங்கள்... போலீசில் புகார் அளித்த 3 வயது சிறுவன் வைரல் வீடியோ 3 year old boy goes to police station to complaint against mother
அட்மின் மீடியா
0
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள புர்ஹான்பூரில் 3 வயது சிறுவன் தன் தாயிடம் சாக்லேட் மற்றும் மிட்டாய் கேட்டுள்ளான். ஆனால் அவரது அம்மா சாக்லெட் தராமல் ஒளித்து வைத்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அந்த சிறுவன் தன் தந்தையிடம் சென்று அம்மா சாக்லேட்களை திருடி விட்டார், அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளான்.
சிறுவனின் அப்பாவித்தனமான வற்புறுத்தலால் குழந்தையை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்றனர்.அப்போது போலீஸ் ஸ்டேசனில் இருந்த எஸ்ஐ பிரியங்கா நாயக்கிடம் சிறுவன் தன் தாய் மீது புகார் கொடுத்தார். சிறுவன் கூற கூற எஸ்ஐ பிரியங்கா நாயக் எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ