கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அட்மின் மீடியா
0
சட்டப்பூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
யாருக்கு
எந்த சூழலில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்பது பற்றிய விதிமுறையை
ஒழுங்குபடுத்துவது குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட்
விரிவான தீர்ப்பு அளித்துள்ளார்.
சில
சமயங்களில் பெண்கள் வலுக்கட்டாயமாக உடலுறவுக்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பம்
தரிக்கிறார்கள். இப்படிப்பட்ட பெண்களை அதில் இருந்து காப்பாற்ற இந்த சட்டம்
அனுமதிக்கிறது.
பாதுகாப்பாற்ற முறையில் கருக்கலைப்பு செய்து கொள்வது மட்டுமே தடுக்கப்பட வேண்டும்.திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை உண்டு.
கருக்கலைப்பு சட்டத்தின்படி திருமணமான பெண்கள், கணவரை இழந்த பெண்கள் தங்களது 24 வார கால கருவை கலைக்க உரிமை உண்டு. தேவையற்ற கர்ப்பத்தை கலைக்கும் உரிமை திருமணமான பெண்களுக்கு மட்டுமே உள்ளது என சுருக்குவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்